இன்றைய ராசிபலன்….

இன்று வியாழக்கிழமை தேதி 15.10.2020, ராகுகாலம் மதியம்     1.30-3.00, எமகண்டம் காலை     6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

இன்று உற்சாகத்துடன் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் உங்களுக்கு சாதகமாகவே அமையும். சில ஏமாற்றங்கள் காணப்படும். அவைகள் மூலம் தடை ஏற்பட அனுமதிக்காதீர்கள். உங்கள் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள்.

ரிஷபம்

இந்த நாளில் நல்ல  மாற்றங்கள் ஏற்படலாம். இது உங்களுக்கு உற்சாகத்தை  அளிக்கும்.

மிதுனம்

உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் அணுகுமுறையில் விட்டுகொடுத்து செல்லும் போக்கு காணப்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு  குடும்பப் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே நேர்மையான முறையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

சிம்மம்

கூடுதல் பொறுப்புகள் காரணமாக பதட்டம் நிறைந்து காணப்படும். பாதுகாப்பற்ற உணர்வு காணப்படலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

கன்னி

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.

துலாம்

இன்று தன்னம்பிக்கையுடன் அமைதியான மன நிலையில் இருப்பீர்கள். உங்களின் முக்கியமான செயல்களை செய்து திருப்தி உணர்வை அடைவீர்கள்.

விருச்சிகம்

எளிதான மற்றும் திட்டமிட்ட அணுகுமுறையின்  மூலம் இன்று நீங்கள் வளர்ச்சி அடையலாம். உறுதி மற்றும் தைரியம் உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

தனுசு

நல்ல பலன்களைக் காண கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் சிறிது பணிகளை இன்று முடிப்பீர்கள். சில பணிகள் நிலுவையில் இருக்கலாம்.

மகரம்

இன்று சில தடைகளை சந்திப்பீர்கள்.என்றாலும் திட்டமிட்டு பணியாற்றினால் இந்த நாளை நீங்கள்  சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.

கும்பம்

இன்று நீங்கள் சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள். புதிய நபர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்படுவார்கள். உங்கள் நண்பர்களின் பட்டியல் விரிவடையலாம்.

மீனம்

இன்று வெற்றி பெறுவதற்கு விரைந்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

Exit mobile version