மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களின் விலையில் மாற்றம்.. புத்தாண்டு முதல் அமல்

மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு, புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம், இந்திய சந்தையில் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல், தனது கார் மாடல்களுக்கான விலை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. சீன பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக பல்வேறு கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. அதன்படி, மாருதி சுசுகி தயாரிப்புகளுக்கான விலை ஆல்டோவிற்கு ரூ .2.95 லட்சம் முதல் பிரீமியம் ஆறு இருக்கைகள் கொண்ட எம்பிவி, எக்ஸ்எல் 6 வரை ரூ .11.52 லட்சம் விலை வரை உயர்கிறது.

Exit mobile version