எஸ்.பி.ஐ. வங்கி சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு 51.9% அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், எஸ்.பி.ஐ. வங்கி தனிப்பட்ட முறையில் 2020 செப்டம்பர் காலாண்டில், ரூ.4,574 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ. வங்கியின் 2020 செப்டம்பர் காலாண்டின் நிகர வட்டி வருவாய், ரூ.28,181.5 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 14.6 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில், ரூ.3,012 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும், ரூ.1,562 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 51.9 சதவீதம் அதிகமாகும்.