உடல்நலக்குறைவால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.!

அதிக ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சீனிவாசன். தனக்கு தானே பவர் ஸ்டார் என பட்டம் சூட்டிக் கொண்டார். காமெடி மற்றும் குணநட்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தனக்கு ஒரே ஒரு போட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பதையும் அவர் பல பேட்டிகளில் தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அதன்பின். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் பவர் ஸ்டார் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

Exit mobile version