நடிகை ஹரிப்ரியா கண்ணீர்… அவர் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகம் என்ன…

நடிகை ஹரிப்ரியா கண்ணீர்… அவர் வாழ்க்கையில் நடந்த பெரும் சோகம் என்ன…

நடிகை ஹரிப்ரியா, கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர். இதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் என சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் 2012 ஆம் ஆண்டு, பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் அவரை பற்றி தவறான வதந்திகள் பரவி வருகிறது இதனால் மனமுடைந்த ஹரிபிரியா சமீபத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் அவர் நான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் தன்னை பற்றி தவறான செய்திகளை போட வேண்டாம் என்று கூறினார்.நான் என்னுடைய வாழ்க்கையை மிகவும் சிரமத்தோடு வாழ்கிறேன்.

என் மகனுக்காக மட்டும் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றும் தயவுசெய்து என்னை பற்றி தவறான வதந்திகளை விமர்சிக்க வேண்டாம் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version