பாலா, பாரதிராஜா இடையே சமரசம்…நீண்ட நாட்களாக நடந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது !!!

‘குற்றப் பரம்பரை’என்ற படத்தின் உருவாக்கத்தால் பாரதி ராஜா மற்றும் பாலா இடையே கருத்து வேறுபாடு இருந்தது பல இடங்களில் மாறி மாறி தகாத வார்த்தைகளால் தாக்கி கொண்டனர். தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்த, பாரதிராஜாவும் பாலாவும் இப்போது சமரசமாகிவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.

ஜூலை 17 இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு “தாதா சாகேப் பால்கே” விருது கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினர். அதில் தேசிய விருது வென்ற பல திரையுலகினரின் பெயர் இருந்தது. அந்தப் பட்டியலில் இயக்குநர் பாலாவின் பெயரைப் பார்த்தபோது பலருக்கும் ஆச்சரியம் அடைந்தனர்.

இப்போது பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்காகப் பரிந்துரைத்தவர்களின் பட்டியலில் பாலா பெயர் இருந்தது.

“சில மாதங்களுக்கு முன்பு பாரதிராஜா – பாலா இருவரும் சந்தித்துப் பேசி சமரசமாகி விட்டார்கள். இருவருக்குள்ளும் இப்போது எந்தவித பிரச்சினையுமில்லை” என்று தெரிவித்தார்கள்.சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Exit mobile version