BIGG BOSS 5 : பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி?!

பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக இன்று புதிய ஆள் வருவது போல முதல் ப்ரோமோ அமைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக சஞ்சிவ் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டின் கதவும் திறக்கப்படுகிறது. எனவே போட்டியாளர் யாரேனும் உள்ளே வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ப்ரோமோவில் மாஸ்டர் பட பாடல் ஒளிபரப்பாகி உள்ளதால் சஞ்சீவ் தான் என்ட்ரி ஆகவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.

Exit mobile version