‘Ticket to Finale’-வின் முதல் இரண்டு இடத்திற்குள் வருகிறவர் யார் என்பதற்கான போட்டி நடக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் டிக்கெட் டூ ஃபினாலேவின் அடுத்த டாஸ்க்குகள் நடக்கிறது. இதில் ரியோ முதலிடத்திலும் ஷிவானி பாலா இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.
தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர்களுடன் போட்டியிட வேண்டும். அதன்படி, போட்டியாளர்களுக்கு நடுவில் பந்துகள் வைக்கப்பட்டிருக்கு. அதை எடுத்து அவர்களுக்கு சிறிது தொலைவில் வைக்கப்பட்டுள்ள வளையத்திற்குள் படுத்து உருண்டு சென்று வைக்க வேண்டும்.
READ MORE- பிறந்தநாள் வாழ்த்துகள் ’இசைப்புயல்’…ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துகள்!
பந்துகளை நிரப்பிய பின்னர் மீண்டும் ஒவ்வொரு பந்துகளாக எடுத்து முதலில் இருந்த வளையத்திற்குள் சென்று வைக்க வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி என்கிற போது கேபியும் பாலாவும் இருக்கிறார்கள். இதில் கேபியும் பாலாவும் இருவரும் ஒரே நேரத்தில் பந்துகளை வட்டத்திற்குள் வைக்க யார் ஜெயிப்பார்கள் என்பது இன்றைய எபிசோட்டில் தெரிய வரும்.