அர்ச்சனாவை அழவைத்த பாலாஜி! #BiggbossPromo1

பிக்பாஸ்ஸின் முதல் புரோமோவில் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் அர்ச்சனாவும் பாலாஜியும் இரண்டு அணிகளின் தலைவர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நேற்று நாமினேஷனில் கேபி, ரம்யா, ஷிவானி, சோம், ரமேஷ், நிஷா ஆகியோர் வந்துள்ளனர்.

வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் ‘புதிய மனிதா’ என்ற ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். இதில் அர்ச்சனா, கேபி, ரம்யா, சோம், ஷிவானி, ஜித்தன் ரமேஷ் என இவர்கள் ஒரு டீமாக பிரிகிறார்கள்.

இவர்கள் ‘எந்திரன்’ ரோபோ போல இயந்திரங்களின் அணி, அர்ச்சனா தலைவர். இன்னொரு டீம்மின் தலைவர் பாலா. இயந்திரங்களிடம் இருந்து கோபம், மகிழ்ச்சி, துக்கம் என எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர மனிதர்கள் அணி எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

ரோபோக்களை குடை பிடிக்க வைப்பது, பாஸ்ஸி ரோபோ, ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற வார்த்தைகளை சொல்லி கடுப்பேற்றுவது என எல்லா முயற்சிகளும் நடக்கிறது.

இதில் அர்ச்சனாவை அழ வைக்க ஒரு பவுலில் முட்டையை உடைத்து அதை முகத்தில் தடவி கொண்டு மூக்கை மூடுமாறு பாலா சொல்ல ஆரியும் நிஷாவும் அதை கண்காணிக்கிறார்கள். அர்ச்சனாவிற்கு இதில் கண்ணீர் வருவதோடு புரோமோ முடிகிறது.

Exit mobile version