ரசிகர்களுக்கு சாக்சி அகர்வால் கொடுத்த பர்த்டே கிஃப்ட்!

நடிகை சாக்சி அகர்வால் தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் மாடர்ன் உடையை விட சேலையில் தான் மிகவும் அழகாக இருப்பதாக, ரசிகர்கள் கருத்து தெரிவித்ததால், அவர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டதாக கூறினார்.

இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்காக சேலையில் இருக்கும் புகைப்படத்தை பிறந்தநாள் பரிசாக பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அன்பு தன்னை திக்குமுக்காட வைத்ததாகவும், ரசிகர்களுக்கு அன்புக்கு தான் கட்டுப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த கொரோனா வைரஸ் காலத்தில் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க தான் இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகில் அன்பை விட பெரியது எதுவும் இல்லை என்ற சாக்சி, அந்த அன்பை சக மனிதர்களிடத்தில் காண்பியுங்கள் என கூறியுள்ளார்.

Exit mobile version