பிறந்தநாளில் ரசிகர்களை ஏமாற்றிய இயக்குநர் மணிரத்னம்..!!

Ponniyin selvan movie
Maniratnam

தமிழ் சினிமா இயக்குநர் மணிரத்னம் நேற்று 66-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இதனுடைய முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தியளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்தின் அப்டேட் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இயக்குநர் மணிரத்னம் நேற்று 66-அது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பிஎஸ்-1 படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பே இது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் பி.எஸ்-1 படக்குழுவுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version