பொன்னியின் செல்வன் படத்தின் ’சோழா சோழா’ பாடல் வெளியானது

பொன்னியின் செல்வன் படத்தின் சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா,ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும், கார்த்தி வந்தியதேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. இந்த நிலையில், பொன்னிநதி பாடலை தொடர்ந்து சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. வீரம், மானம் புலிமகனுக்கு இரு கண்ணல்லோ, படபட புலிக்கொடி வானம் ஏறட்டும், புவிநிலம், புவிநிலம் சோழம் ஆகட்டும் என்ற பாடல் வரிகளில் பட்டையை கிளப்புகின்றன. சோழதேசத்தின் வரலாற்றை மையமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Exit mobile version