திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

நடிகர்  சூர்யா திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘நேருக்கு நேர்’. மணிரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள்ளது. முன்னதாக, இந்த படத்தில் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியவில்லை. நடனம் ஆட வரவில்லை என  பல்வேறு இதழ்கள் திட்டித்தீர்த்தன.

பின், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில்  சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு அதே இதழ்கள் புகழ்ந்து தள்ளின. அதன்பிறகு காக்க காக்க, கஜினி, பேரழகன், பிதாமகன் என பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில், தனது 25 ஆண்டுகால திரையுலக பயணம் குறித்து சூர்யா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “உண்மையில் அழகான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள். கனவு காணுங்கள். நம்புங்கள். உங்கள் சூர்யா” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version