நடிகர் கவுண்டமணி குறித்த வதந்திகள்….காவல் ஆணையரிடம் புகார்

நடிகர் கவுண்டமணி குறித்த வதந்திகள் பரவி வருவதால் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் நடிகர்களுக்கு நிகரான கால்சீட்டு, சம்பளம் என்று கெத்தாக வலம் வந்தவர் கவுண்டமணி.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரது உடல் நிலை குறித்தும் பல்வேறு யூடியூப் சேனல்கள் பல வதந்திகள் பரப்பி வந்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது.

எனவே நேற்று அவரது வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர்கவுண்டமணியின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் நடிகர் கவுண்டமணி முழு உடல்நலத்துடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த செந்தில் ’’கவுண்டமணி எப்பவும் எனக்கு அண்ணன்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version