பீட்டர் பால் மனைவியை கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனை கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிட்டுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

பீட்டர் பால் வனிதா மற்றும் எலிசபெத் ஆகிய மூன்று பேரின் கதை ஊர் அறிந்த உண்மை. ஊரடங்கில் அனைவரும் பொழுது போகாமல் இருந்த நிலையில் இவர்களின் கதை காட்டு தீபோல் பரவி பெரும் பொழுதுபோக்காக இருந்தது. அதுமட்டுமின்றி யூ டியூப் முழுவதும் இவர்களே ட்ரெண்டில் இருந்தனர். அதற்கு பின்னர் சொல்லவதெல்லம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர்களில் பிரச்சனையில் மூக்கை நுழைந்ததும் பின்னர் வனித்துவிடம் தகாத வார்த்தைகள் திரு வாங்கி கொண்டு இதிலிருந்து ஓரங்கட்டியதும் நமக்கு தெரியும்.

இந்த வனிதா பிரச்சனையால் பலரும் பிரபலம் அடைந்தனர். அனால் அதனை தொடர்ந்து அவரவர் அவரவர் வேலைகளை பார்க்க தொடங்கினர். எலிசபெத் பற்றி நாம் மறந்து கூட போய் விட்டோம். இப்போது லட்சுமி ராமகிருஷ்னன் ஒரு ட்வீட் ஒன்று போடு இருந்தார். அதனில் பீட்டர் பால் முன்னாள் மனைவி எலிசபெத் பற்றி ட்வீட் செய்திருந்தார்.

அந்த டீவீட்டில் அவர் ஒரு சின்ன அப்டேட், #Anew நடத்தும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் படிப்பில் எலிசபெத் ஹெலனை சேர்த்துவிட்டுள்ளேன். அவர்களுக்கு நன்றி. ஹெலனை சேர்த்துக் கொண்டார்கள். அவருக்கு நான் புது லேப்டாப் வாங்கிக் கொடுத்துள்ளேன். அவர் வகுப்புகளை துவங்கிவிட்டார். படிப்பு முடிந்த உடன் அவருக்கு வேலை கிடைத்துவிடும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் பலரும் லக்ஷ்மியை பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version