நடிகர் விமல் மீது ஊர் மக்கள் வழக்கு பதிவு!

நடிகர் விமல் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விமல் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் அவரது சொந்த ஊர் மக்கள் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை பக்கத்தில் உள்ள பண்ணாங்கொம்பு விமலின் சொந்த ஊர். இங்குள்ள அவரது பூர்விக வீட்டுக்கு எதிரில் உள்ள காலி மைதானத்தில் விளக்கு தூண் ஒன்று உள்ளது. இங்கு ஊர் பொதுமக்கள் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தனர்.

விளக்கு தூணை சுற்றி சிறிய மேடை ஒன்றையும் கட்டியிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று அந்த அந்த மேடைய புல்டவுசரால் இடித்து தள்ளியுள்ளனர்.

READ MORE- ’‘புதுப்பேட்டை2’ கண்டிப்பாக வரும்’- செல்வராகவன்!

இது விமல் குடும்பத்தாருடைய வேலைதான் என சந்தேகத்தின் பேரில் அந்த ஊரை சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் காவல் நிலையத்தில் விமல் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version