’’எமர்ஜென்சி தந்த நெருக்கடியில் பிகார் அரசியலில் பிறந்தவர்’’- ராம் விலாஸ் பஸ்வானுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர்

Add New Post

Save draftPreviewPublishAdd title

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவையொட்டி இரங்கல்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று இரவு காலமானார் என்று அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்

இதையடுத்து அதிகாரப்பூர்வாக அனைத்து மீடியாக்களிலும் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு பற்றிய செய்திகள் வெளியானது.

தனது மதிப்புமிக்க நண்பனை இழந்துவிட்டதாக பிரதமர் மோடி நேற்று இரக்கல் தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,

டி.எஸ்.பியாக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பணிக்கு செல்லாமல் மக்கள் பணிக்கு வந்த உயரமான ஆளுமை திரு, #RamVilasPaswan அவர்கள் எமர்ஜென்சி தந்த நெருக்கடியில் பிகார் அரசியலில் பிறந்தவர். ஆறு பிரதம மந்திரிகளின் அமைச்சரவையில் இடம் பிடித்தவர்.ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராம் விலாஸ் பஸ்வானுக்கு  இதய  அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version