மீண்டும் திரைப்படமாகும் ‘தென்னிந்திய கிளியோபாட்ரா’ சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை

தனது காந்தக் கண்களால் தென்னிந்திய சினிமா உலகை கட்டி போட்டு வைத்திருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

1970களில் ஒப்பனைக் கலைஞராக திரைத் துறையில் நுழைந்த சில்க் ஸ்மிதா நடிகர் வினுச்சக்கரவர்தியால் வண்டிச்சக்கரம் என்னும் திரைப்படத்தில் சில்க் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்த பட்டார். பின்னாளில் அந்த பெயரே சினிமாவில் இவருக்கு நிலைத்துவிட்டது. தனது 17 ஆண்டுகால சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெரிய பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் கூட வெற்றியடைய சிலுக்கின் ஒரு பாடல் காட்சி தேவைப்பட்டது. இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் டர்ட்டி பிக்சர் என்னும் திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை தழுவலாக வந்தது.

தற்பொழுது அவரது வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலேயே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ எச்.முரளியும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்

Exit mobile version