நான் வேலை பார்த்த ஸ்டண்ட் யூனியன் கண்டுகொள்ளவில்லை பொன்னம்பலம் வருத்தம்..

சென்னை: மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கும் பொன்னம்பலம், 20 தடவைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்தது என்று வருத்தத்துடன்தெரிவித்துள்ளார்

சென்னை: மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கும் பொன்னம்பலம், 20 தடவைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்தது என்று வருத்தத்துடன்தெரிவித்துள்ளார் 

தமிழ் சினிமாவில் 90களில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.கமல்தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்து கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்  அப்பொழுது அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது 

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த பொன்னம்பலம் தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் நிறைய படங்களில் நடித்தேன். நன்றாக சம்பாதித்தேன். ஆனால், எனக்கென்று எதையும் சேர்த்து வைத்து கொண்டதில்லை. இப்போது எனக்கு கிட்னி பிரச்சனை வந்திருக்கிறது. இந்த தருணத்தில் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் விற்றுதான் எனது மருத்துவ செலவுகளை பார்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சரத்குமார் அவர்களிடம் உதவி கேட்டேன். அவரும் உடனே பணம் கொடுத்து உதவினார். அதே போல நடிகர் கமல் எனது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார்’


மேலும் என்னுடன் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.நான் எவ்வளவு டூப் போட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று சினிமா நட்சத்திரங்கள் பலருக்கு தெரியும், நடிகர்களுக்கு தெரியும். அவர்கள்தான் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும் ரஜினி சார் எனது வாடகை வீட்டிற்கு ஏதாவது உதவ வேண்டும். விஜய் சார் விக்ரம் சார் இவர்கள் எல்லாம் எனக்கு உதவினால் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் நான் அஜித் சாரை மிகவும் நம்புகிறேன். ஏனென்றால் அவர் பல பேருக்கு உதவி செய்திருக்கிறார் மற்றும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி நடிகர் ராகவா லாரன்ஸ் எனக்கு உதவி செய்வீர்கள் என நம்புகிறேன்”  என்று கூறியுள்ளார்.

Exit mobile version