புனித் ராஜ்குமார் சமாதியைக் கண்டு கண்கலங்கிய சூர்யா… அப்போ சொன்ன அந்த வார்த்தை…

தமிழில் முன்னணி நடிகரான சூர்யா, மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். பல பள்ளிகள், முதியோர் இல்லங்கள், 1800 குழந்தைகளின் படிப்பு செலவினையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார். புனித் போன்ற புனித ஆத்மாவை இழந்து வாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version