ஜோக்கர் போன்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் அவர் பாணியில் அடிச்சு தூக்குவார் என்கிறார் பார்த்திபன்!!

நடிகர் மற்றும்  இயக்குனருமான பார்த்திபன் தனது ரசிகர்களால் தல என்று அன்பாக அழைக்கப்படும் நட்சத்திர நடிகரை  பாராட்டியுள்ளார்.

நடிகர் அஜித் மற்றும் பார்த்திபன் ஆகியோர் ‘நீ வருவாய் என’, ‘ உன்னைகொடு  என்னை தருவேன்’ படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அஜித்தின்  நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவருடைய நடிப்பு பிரமிக்கத்தக்க வகையில் அமைந்தது ஆக தெரிவித்துள்ளார்அதே வேளையில், ஹாலிவுட் நடிகர் ஜோவாகின் பீனிக்ஸ் நடித்த ஜோக்கர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க  நம்ம தலஅஜித்  மிகவும்பொருத்தமானவர் என்று அவர் இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பற்றி  பகிர்ந்த பார்திபன்,.இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும், இது நட்சத்திர நடிகரின் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் தான் உணர்ந்த ஒரு அனுபவம் என்றும் கூறினார். அவர் தன்னுடன் இரண்டு படங்களில் பணியாற்றியதாகவும், அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரோட படம் பண்ண நல்ல ஸ்கிரிப்ட் அமையும். அதுக்கான வாய்ப்பும் அமையும். அதற்காக நான் காத்து கொண்டு இருக்கிறேன். நேர்கொண்ட பார்வை படத்தில் நண்பர் அஜித்தோட பர்ஃபாமென்ஸ் வேற லெவல். வசனங்களைவிட அவரோட கூர்மையான கண்கள் ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது.

 அஜித்தின் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ரசிகரின் விருப்பத்திற்கு பதிலளித்த பார்த்திபன், “எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் ஆனால் அவர் அளவுக்கு வில்லன் பாத்திரத்தில் நான் பொருந்துவேணா என்று தெரியவில்லை  ஒருவரை ஹீரோவாக மாற்றுவதில் நிறைய வேலைகள் உள்ளன, அது சற்று சுலபமானது தான்ஆனால் வில்லனாக இருக்க, மிக முக்கியமான அம்சம் அந்த நபருக்கு தேவை நடிப்பு.அதனால்தான் அஜித்  தரமான வில்லனாக முடியும் என்று நான் நினைக்கிறேன். “

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவின் ‘வாலி’ படத்தில் அஜித்தின் அசாதாரண நடிப்பை நினைவு கூர்ந்தார், “அஜீத்ஹாலிவுட் படமான ‘ஜோக்கர்’ போன்ற ஒரு படத்தில் நடித்தால், அவர் தனது அற்புதமான நடிப்பால் அதை சொல்லி அடிப்பார். அஜித் அப்படி ஒரு பாத்திரத்தை செய்தால் திரையரங்குகளில் பார்வையாளர்கள் பெருகிவிடுவார்கள் , என்று”பார்த்திபன் கூறினார்.

Exit mobile version