திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு தேசிய விருது!!

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி.

டெல்லி, டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு துணைத்தலைவர் வேங்கையா நாயுடு, மத்திய தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் சிறந்த துணை நடிகர் “SUPPORTING ACTOR” விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

படத்தின் நடிகர் விஜய் சேதுபதியிடம் 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் தேசிய விருது குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதியின் மகன் “நீ ஆம்பளையா இரு பொம்பளையா இரு! ஆனா எங்கக்கூடவே இரு!!” என்ற வசனம் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது இந்நேரத்தில் நினைவுகூறதக்கது. முன்னதாக இதே 67வது தேசிய திரைப்பட விழாவுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version