+2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு நாளை முதல் ஜூலை 30ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மறுக்கூட்டலுக்கு உயிரியல் பாடங்களுக்கு ரூ.305, ஏனைய பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மறு மதிப்பீடு/ மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் அதிகமான மாணவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version