அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது” சென்னை உயர் நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம்

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு, பல்கலை கழகம் மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில்மனுவில் ராயர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வு கட்டாயம் நடத்தி தீரவேண்டும் என கூறியுள்ளது.

Exit mobile version