பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் …

பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் இதுவரை 55,995 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும். இணையதள பதிவு முடிவு பெற்றவுடன் ரேண்டம் எண் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேண்டம் எண் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். TNEA இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடுவதுடன் தகவலும் அனுப்பப்படும்.

கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் பகுதி நேரப் படிப்பு, எம்பிஏ, எம்சிஏ, முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் இணையதளம் மூலமாகவே நடைபெறும் எனவும் கூறினார்.

Exit mobile version