ஆகஸ்டு 5 முதல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகஸ்டு 5ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,30,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 22ம் தேதி தொடங்கிய நிலையில் ஜூலை27ம் தேதி நிறைவுப்பெற்றது. சுமார் 4,0,7045 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஆகஸ்டு 5ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்

Exit mobile version