முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது?

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ள ஏஐசிடிஇ, கல்லூரிகளுக்கான அனுமதி அல்லது நிராகரிப்பு செயல்முறையை ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிப்பதாக கூறியுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் ஜூலை31ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version