செங்கலை கட்டி நீர் மூழ்கடித்து 1 வயது குழந்தை கொலை- 13 வயது சிறுவன் கைது..!!

UP Murder
death

தவழும் வயதில் இருந்த ஒரு வயது குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொடூரமாக கொலை செய்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள அலிகஞ்ச் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருடைய ஒரு வயது பெண் குழந்தை ரீத்து கடந்த 15-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளது.

இதையடுத்து கேசவ் ராகுல் மனைவியுடன் அலிகஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட அவர்கள், கேசவ் ராகுல் அமைந்துள்ள வீட்டைச் சுற்றி விசாரணை நடத்தினர். எங்கு தேடியும் குழந்தை ரித்து கிடைக்கவில்லை.

அப்பகுதியில் இருந்த பள்ளி மைதானத்தின் ரித்து காணாமல் போன போது அணிந்திருந்த சட்டை கிடைத்தது. அதையடுத்து பள்ளி வளாகத்துக்குள் சோதனையிட்ட போது, அங்குள்ள தண்ணி தொட்டியில் காலில் செங்கல்கள் கட்டப்பட்ட நிலையில் ரித்துவின் சடலம் கிடந்தது.

அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, கேசவ் ராகுல் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவன் குழந்தை ரித்துவை கொன்றதை ஒப்புக்கொண்டான். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய தந்தைக்கும் கேசவ் ராகுலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கேசவ் ராகுல் தனது பெற்றோரை மிகவும் கீழ் தரமாக திட்டியதாகவும், அதனால் எழுந்த ஆத்திரத்தில் குழந்தை கொலை செய்ய திட்டமிட்டு கொன்றதாகவும் 13 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலிகஞ்ச் காவல் உதவி ஆணையர் சையது அலி அப்பாஸ் தெரிவித்தார்.

Exit mobile version