5,10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் ரத்தாகாது

500 ரூபாய் தாளைப் போல 5,10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற உள்ளதாக வெளியான தகவல் தவறு’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. . ‘மார்ச் 21க்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பின் அவற்றை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது. பின்னர் அவை செல்லாததாகி விடும்’ என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்த ஏராளமானோர் பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களுடன் வங்கிகளுக்கு படையெடுத்தனர்.

அவர்களை ‘அதுபோல உத்தரவு எதுவும் வரவில்லை’ என வங்கிகள் திருப்பி அனுப்பி வந்தன. இதன் பின்னர் பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் ரத்தாகாது’ என மத்திய அரசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ‘டுவிட்டரில்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.  சமீபத்தில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்து தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version