கீழே வைத்தவுடன் பெட்டியோடு மொத்தமாக வெடித்த கையெறி குண்டுகள்… 6 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்!!

ராய்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிஆர்பிஎஃப் வீரர்கள் 211 பேர் சிறப்பு ரயில் மூலமாக ஜம்முவிற்கு சென்று கொண்டிருந்தபோது பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு ரயில் பெட்டியில் வைக்கப்பட்ட உடன் வெடித்திருக்கிறது.

இதில் சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஒருவர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வீரர்களும் இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஆர்பிஎஃப் சிறப்பு ரயிலில் பற்றவைப்பு கருவி அடங்கிய பெட்டி தரையில் விழுந்ததால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் ராய்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version