சோனம் கபூர் மாமியாருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தங்க, வைர நகைகள் கொள்ளை..!!

sonam kapoor house theft

சோனம் கபூர் வீட்டில் நகைகளை திருடிய புகாரில் ஒரு செவிலி மற்றும் அவருடைய கணவரை காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகை சோனம் கபூரின் கணவர் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அகுஜா. இவருடைய வீடு டெல்லி அமிர்தா ஷெர்கில் மார்க் பகுதியில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதி வீட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் திருடுபோயுள்ளது அகுஜா குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 23 ம் தேதி திருடுபோன நகைகளை கணக்கிட்டு, அதுகுறித்து துக்ளக் சாலை காவல்துறையினருக்கு அவர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரித்த வந்த காவல்துறையினர், கடந்த புதன்கிழமை அகுஜா குடும்பத்தினர் வீட்டில் செவிலியாக பணியாற்றி வந்த அபர்ணா ரூத் வில்சன் (30) மற்றும் அவருடைய கணவர் நரேஷ் சாகர் (31) இருவரையும் கைது செய்தனர்.

நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் தாயாரை கவனித்துக் கொள்ளும் வேலையை செவிலி அபர்ணா, அவர்களுடைய வீட்டில் இருந்தவாரே செய்து வந்துள்ளார். அவருடைய கணவர் சாகர் தனியா நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

தற்போது இந்த வழக்கு டெல்லி குற்றவியல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகுஜாவின் வீட்டில் பணியாற்றி வரும் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் செவிலி அபர்ணா மற்றும் அவருடைய கணவர் சாகர் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகளை கைப்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. சோனம் கபூரின் மாமியாரான சரளா அகுஜாவுக்கு தினந்தோறும் தூக்க மாத்திரைகளை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை அபர்ணா திருடி வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version