சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை 10.05 மணி வாக்கில் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிக்க 150 பேர் தயாராக இருந்தனர். இந்த நிலையில், விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எதனால் என்ற காரணம் பற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் அறிவிக்கப்படவில்லை என பயணிகள் அனைவரும் வேதனை தெரிவித்தனர். வேறு மாற்று விமானங்கள் எதனையும் விமான நிறுவனம் ஏற்பாடும் செய்யவில்லை எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால், விமான நிலையத்திலேயே பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது போன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நேற்று அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. லண்டனில் இருந்து டெல்லி வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று, வானிலை மோசம் அடைந்த நிலையில், நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கிவிட பட்டது பின்னர், 2 மணிநேரத்திற்கு பின்னர் வானிலை தெளிவடைந்ததும், லண்டனுக்கு புறப்பட விமானம் தயாரானபோது, விமானி அதனை இயக்க மறுத்துவிட்டார். தனக்கான பணி நேரம் கட்டுப்பாடுகளை சுட்டி காட்டி அவர் விமான இயக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பே அதிக முக்கியம் வாய்ந்தது என கூறி விமானம் புறப்படுவதற்காக, மாற்று விமானிகள் மற்றும் ஊழியர்களை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான வானிலையால் தவித்த ஏர் இந்தியா விமானம்!
-
By mukesh

Related Content
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!
By
daniel
August 31, 2026
ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!
By
daniel
August 31, 2026
68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026
HDFC Bank CEO சஷிதர் ஜகதீஷன் விலகுகிறார்; அக்டோபர் 26-ல் ஓய்வு!
By
daniel
August 30, 2026