திருமணத்தை நிறுத்த மணமகனின் கழுத்தை அறுத்த மணப்பெண்..!!

Andhra Attempt murder
arrest

பெற்றோர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனை தேடிச் சென்று மணமகள் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான பின்னணி விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பா. பி.எச்.டி படித்து வரும் இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் வேலை பார்த்து வந்த ஹைதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதை பார்ட்டி வைத்து கொண்டாடலாம் என்று ராமகிருஷ்ணாவை மணமகள் புஷ்பா அழைத்துள்ளார். இதற்காக இருவரும் அனகாபள்ளியிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பரிசு தருவதாக கூறி ராமகிருஷ்ணாவின் கண்ணை கட்டிய புஷ்பா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். கழுத்தில் கத்தி அறுத்தவுடன் ராமகிருஷ்ணா அலறி துடித்துள்ளார்.

அதை பார்த்து மனம் மாறிய புஷ்பா, உடனடியாக ராமகிருஷ்ணனை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார். காயத்தை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக புஷ்பாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ நான் திட்டமிட்டிருந்தேன். எனவே எனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. பெற்றோர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், மாப்பிள்ளையை கொலை செய்ய திட்டமிட்டேன் என்று புஷ்பா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version