இந்தியாவில் 25 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 32 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 606 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 814 ஆக உயர்ந்து, குணமடைந்தோர் சதவீதம் 63.23 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 606 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 233 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,928 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,487 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,167 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,079 ஆகவும், அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,000 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 682 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,012 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 530ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 386 ஆகவும், ஹரியாணாவில் 319 ஆகவும், ஆந்திராவில் 408 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 928 பேரும், பஞ்சாப்பில் 221 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 206பேரும், பீகாரில் 180 பேரும், ஒடிசாவில் 77 பேரும், கேரளாவில் 35 பேரும், உத்தரகாண்டில் 50 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 38 பேரும், அசாமில் 46 பேரும், திரிபுராவில் 3 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா, தாத்ராநகர் ஹாவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 18 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,2,310 ஆகவும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,2,310 ஆகவும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,2,310 ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version