மீண்டும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 443 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1600 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,41,89,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 443 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் 4,54,712 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,762 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,67,367 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,67,695 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,02,27,12,895 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 12,30,720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version