இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 77,06,946 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.14 கோடியாக உயந்துள்ளது.

முதன்முதலாக சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா, உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தற்போது 7,15,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,16,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 68,74,518 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 55,839 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.20 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 9,86,70,363 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,69,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.14 கோடியாக உயந்துள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4 கோடியே 14 லட்சத்து 83 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,10,429 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11,36,320 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.