மீனவர் பிரச்சினை – மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று மாநிலங்களவை கூடியதும் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார். இதை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.  இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. தம்பிதுரையும் மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. இலங்கை அரசிடம் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version