உத்தரகாண்ட் நிலச்சரிவு – உயிர் பிழைத்த இளைஞரின் நெகிழ்ச்சி தருணம்..

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த இளைஞரின் மகிழ்ச்சிக்கரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் :

சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், பனி உருகி பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் எனத் அறிவித்த நிலையில், மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more – இன்றைய ராசிபலன் 08.02.2021!!!

அதன்படி, இந்த நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version