34 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் 311 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்திய அணி 34 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி குயின்ஸ்பெர்க் ஓவல் மைதானத்தில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 311ரன்களை எடுத்தது.

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி சஞ்சு சாம்சன் (54) ஸ்ரேயஸ் (63) மற்றும் அக்‌ஷர் படேலின்(64*) சிறப்பான ஆட்டத்தால் 49.4வது ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 272 ரன்களை சேசிங் செய்திருந்தது. இந்த வெற்றியின் மூலம், அந்த சாதனையை 34 ஆண்டுகள் கழித்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி (3வது சேசிங்) முறியடித்து சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி 360 ரன்களை சேசிங் செய்து முதல் இடத்திலும், இலங்கை அணி 312 ரன்களை சேசிங் செய்து இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version