கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு..

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு..

இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலம் கேரளா. ஆனால் அந்த மாநிலம் அதில் இருந்து மீண்டு வந்தது இந்தயாவுக்கே எடுத்துக்காட்டாய் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆயிரத்திற்கும் குறைவாக வந்துகொண்டு இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று புதிய உச்சமாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த மாநிலத்தின் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(புதன்கிழமை) 1,038 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் அங்கு இதுவரை பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். இதில் பாதிக்கப்பட்டுள்ள 226 பேர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கேரள மாநிலத்தில் 8,818 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version