ஸ்மார்ட் போன் பயனாளர்களே உஷார்… உங்க பணத்துக்கு இப்படியும் ஆபத்து இருக்கு!

Bancking

Bancking

சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்திய வங்கிகளின் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து புதிய வகை வைரஸ் லிங்க் பரப்பப்படுவதை கண்டறிந்துள்ளனர். டிரினிக் என்ற அந்த மால்வார் வைரஸ் லிங்கை குறுச்செய்தி மூலமாக அனுப்பி ஸ்மார்ட் போனில் ஆன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தரவுகளை திருடி வருகின்றனர்.

டிரினிங் வைரஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் ஊடுருவி 27 இந்திய வங்கிகள் உள்ளிட்ட விபரங்களை திருடுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்தியை ஹேக்கர்கள் அனுப்புகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள லிங்கில் நுழைந்த உடன் புதிய ஆப் டவுன்லோடு ஆகும். அந்த ஆப் மூலம் ஆதார் எண், டெபிட் கார்டு விபரங்கள்உள்ளிட்டவை திருடப்படுவதாக மத்தியஅரசு எச்சரித்துள்ளது.

இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பண மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே வருமான வரித்துறை அல்லது இந்திய அரசின் பெயரில் ஏதாவது குறுச்செய்தி வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாமென வங்கிகளும், மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version