நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த தி.மு.க எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய முகக்கவசம் அணிந்தும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தும் பதாகைகளையும் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில்,தமிழகத்தில் மொத்தம் 11 மாணவர்கள் நீட் தேர்வுகளால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நீட் தேர்வு அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.

Exit mobile version