கேரளாவில் தான் குழந்தையின் மருத்துவ செலவுக்காக தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முற்பட்ட தாய்.

கேரளாவை சேர்ந்தவர் நாற்பத்திரெண்டு வயதான சாந்தி என்பவர் அவர் தன் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமணியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவருக்கு மிகவும் பணம் தேவைபட்டதால் அவர் ஓர் பலகையில் தன் குழந்தையின் மருத்துவ செல்வுக்காகவும், கடனுக்காகவும் தாயின் உடல் உறுப்புக்கள் விற்பனைக்கு என எழுதியுள்ளார் அதில் இதயம் உட்பட எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண் தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு வீட்டு வாடகை தரும் அளவிற்கு காசு இல்லாததால் அவர் ரோட்டின் ஓரம் கூடாரம் கட்டி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரின் குழந்தையும் நோய்வாய் பட்டதால் அவருக்கு சில லட்சங்கள் கடனானதால். இதையெல்லாம் தீர்க்க தன் உடல் உறுப்புகளை விற்கும் முடிவிற்கு வந்துள்ளார்.
இதனை அவர் வெளிப்படையாகவே ஒரு பலகையில் எழுதி போட்டுள்ளார். இது இப்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த செய்தி அரசாகந்தின் பார்வைக்கு சென்று இவர்கள் ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனை கேள்வி பட்ட பலரும் இவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.