மனைவி தனது 3 சக்கர வண்டியை தள்ளுவதற்கு சிரமப்படுவதால் அவருக்காக ரூ. 1 லட்சம் செலவு செய்து புதிய வாகனத்தை வாங்கி பரிசளித்துள்ளார் பிச்சைக்காரர் ஒருவர்.
மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர் சாகு (58). இவருக்கு பிறவிலேயே இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. இதனால் அமர்வாரா என்கிற கிராமத்தில் தங்கி பிச்சை எடுத்து வருகிறார்.
எப்போதும் இவரை மனைவி முன்னி மூன்று சக்கர சைக்கிளில் அமரவைத்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுப்பது வழக்கம். ஆனால் உடல்நிலை காரணமாக முன்னியால் கணவரை நீண்ட தூரம் சைக்கிளில் வைத்து தள்ள முடியவில்லை.
தொடர்ந்து நீண்ட தூரம் தள்ளினால் முன்னிக்கு மூச்சிரைப்பு வந்துவிடும். இதனால் கவலை அடைந்த கணவர் சாகு, ரூ. 1 லட்சம் பணத்தில் மூன்று சைக்கிள் வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த மொபட் ஸ்கூட்டர் மூலம் இருவரும் சென்று யாசகம் பெற்று வருகின்றனர்.