மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார்- மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையில் இரண்டு வேளாண் மசோதாக்களை இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மக்களவையில் விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், தற்போது மாநிலங்களவைக்கு வந்தது . அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் ஒன்றாகத் திரண்டு அவற்றை எதிர்த்தனர்.

இந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்கவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Exit mobile version