பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்; இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் அமைந்துள்ள
எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. இந்த சண்டையில் இருதரப்பினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : 2-வது டி 20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா..?

Exit mobile version