பிரதமர் மோடி நாளை உரை

புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் “மத்திய கல்வி அமைச்சகம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி  5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், கல்லூரிகளில் சோவதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தோவு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாகவும் சில கட்சிகள் பேசி வருகின்றன. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கை  தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4:30 மணிக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையாடலில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version