ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் : தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 19 ம்தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் முதற் கட்டமாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் களத்தில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிதீவிரமாக போட்டியிடுகின்றன.மேலும் முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி, சி.பி.ஐ. (எம்.) மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

ஜம்மு- காஷ்மீரில் மொத்தம் உள்ள 280 தொகுதிகளில்,இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இன்று நடைபெறும் இந்த தேர்தலானது பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் .

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version