சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி நாள்தோறும் 5000 பக்தர்கள் அனுமதி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி நாள்தோறும் 5000 பக்தர்கள் அனுமதி வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை :

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது.கேரளா அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 2 வார காலமாக சபரிமலையில் தரிசனத்திற்காக பக்தர்கள் வார நாட்களில் 2 ஆயிரம் நபர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் நபர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்,அவ்வாறு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க படாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில்,ஐயப்ப சாமியை தரிசிக்க நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும்,ஆன்லைனில் முன்பதிவு செய்யாத ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய படை எடுத்து வருவதாலும் அவர்கள் அனைவரையும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Read more – சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : கர்நாடக உளவுத்துறை அறிவிப்பு

இந்தநிலையில்,சபரிமலை சாமி தரிசனத்துக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் நீதிமன்ற உத்தரவின் ஆணை கிடைத்தவுடன் 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Exit mobile version