ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு..8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி துறையில் காலியாக உள்ள Office Assistant, Driver & Watchman பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்;

Office Assistant – 5 காலிப்பணியிடங்கள்

Driver – 2 பணியிடங்கள்

Watchman – 2 பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,700 /- முதல் அதிகபட்சம் ரூ. 62,000 /- வரை, பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Merit list & Interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 09.09.2020 தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்கள் www.ncs.gov.in மற்றும் www.karur.nic.in என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

Exit mobile version